shadow

அரசியலில் குதிக்கின்றார் பெனாசிர் மகன் பிலாவல் பூட்டோ

பாகிஸ்தானில் சுல்பிகர் அலிபூட்டோ, பெனாசிர் பூட்டோ, அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர்களை அடுத்து பெனாசிர் பூட்டோவின் மகனும் அரசியலில் குதிக்கின்றார்.

பெனாசிர் பூட்டோவின் 9-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நேற்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெனாசிர் கணவர் மற்றும் அவரது மகன் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆசிப் அலி சர்தார் பேசியதாவது:

“எனது மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோ பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார். வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் அமர்ந்து பணியாற்றுவார்” என்று கூறினார்.

இதுவரை லண்டனில் தங்கி இருந்து தற்போது நாடு திரும்பியுள்ள சர்தாரி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். ஆளும் கட்சிக்கு எதிராக பெரிய கூட்டணியை அமைத்து நவாஸ் செரீப் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தனது மகன் பிலாவல் பூட்டோ மகனின் திருமணத்தை அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது.  இன்னும் சிலரோ கட்சியில் புதுமுகங்களை அறிமுகம் செய்து வைப்பார் என்றும் கூறினர். ஆனால், அவர் தனது மகன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக மட்டுமே தற்போதைக்கு அறிவித்துள்ளார்.

Leave a Reply