shadow

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று ஒரே நாளில் 18 ஆயிரம் கோடி காசோலைகள் பரிவர்த்தனை முடக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றும் இன்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்

இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் 18 ஆயிரம் கோடி மதிப்புள்ள காசோலைகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

நாளை சனி ஞாயிறு விடுமுறை என்பதாலும் மேலும் கோடிக்கணக்கான ரூபாய் காசோலைகள் மறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது