shadow

சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வெளியே, வங்கதேசம் உள்ளே!

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த முக்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியது 3 புள்ளிகள் எடுத்திருந்த வங்கதேசம் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டதூ. இதனால் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. ஃபின்ஸ் 68 ரன்களும், கேப்டன் ஸ்மித் 56 ரன்களும் எடுத்தனர்.

278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த்-லீவீஸ் விதியின்படி இங்கிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அரையிறுதிக்கு தகுதி பெறும்

Leave a Reply