பெங்களூர்-எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் ஓசூர் அருகே தடம்புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் பயணிகள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இன்று காலை பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஓசூர் அருகே ஆணைக்கல் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டது. இந்த விபத்தில் இரண்டு ஏ.சி.ரயில் பெட்டிகளும், ரண்டு பொது ரயில் பெட்டிகளும் தடம்புரண்டுள்ளது.
இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த ரயிலில் பயணம் செய்த பல பணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. மேலும், ஒருசில பயணிகள் சேதமடைந்த பெட்டிகளில் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்க மீட்புப்படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்து நடந்த இடத்தை நோக்கி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தலா 10 ஆம்புலன்ஸ் வண்டிகள் விரைந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.