ஒரே ஒருவருக்கு கொரோனா: கட்டிடத்தையே காலி செய்த இன்போசிஸ்

பெங்களூர் இன்போசிஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வந்ததையடுத்து அந்நிறுவனம் அந்த கட்டடத்தை காலி செய்து விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெங்களூரில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சமீபத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து இன்ஃபோசிஸ் நிறுவனம் தான் செயல்பட்டு வந்த கட்டடத்தை காலி செய்துவிட்டது

மேலும் அலுவலக சுத்தம் செய்து அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும் தற்போதைக்கு வீட்டிலிருந்து பணி செய்யுமாறும் அலுவலக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply