shadow

ஸ்லோ பாய்சன் உணவான மைதாவை தடை செய்ய நடவடிக்கை வேண்டும். உணவு துறை ஆணையருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
Rawa-parathaaaaaaa2323
தமிழர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று புரோட்டா. இது மனிதர்களை மெதுவாக கொல்லும் விஷ உணவு என டாக்டர்கள் கூறி வருகின்றனர். புரோட்டா தயார் செய்ய பயன்படும் மைதாவில் விலங்குகளின் கணையத்தில் ‘பீட்டா செல்களை’ அழித்து, இன்சூலின் சுரப்பதை தடுக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருளை கலப்பது உண்டு. இது இன்சுலின் சுரப்பதை தடுத்து மனிதர்களை மெல்ல கொல்கிறது.

இதே மைதாவில் செய்யப்படும் ரொட்டிகள், கேக் வகைகளையும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். எனவே அலொட்சான் மைதாவை தடை விதிக்க வேண்டும் என்று தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை ஆணையர், சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்தகத்துறை இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும் என நாகை மாவட்டத்தை சேர்ந்த கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த மனு மீதான விசாரணையின்போது, உணவு தரம் தொடர்பான விஷயத்தில் மனுதாரர் நிபுணத்துவம் பெற்றவர் இல்லை என்பது தெரிகிறது. அதேநேரம், மைதாவில் ரசாயன கலவை உள்ளது. அது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று மனுதாரர் கூறும் காரணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், இந்த நிலையில், எங்களால் மனுதாரர் கொடுத்த மனுவை பரிசீலிக்கும்படிதான் அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியும்.

எனவே, மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத்துறை ஆணையர் ஆய்வுகளையும், விசாரணைகளையும் மேற்கொள்ளவேண்டும். அப்போது மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கு உண்மை இருப்பதாக தெரியவந்தால், ரசாயன கலவை கொண்ட மைதாவை தடைவிதிக்க சட்டப்படியான நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் மேற்கொள்ளவேண்டும். இந்த மனுவை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply