shadow

இந்தியாவின் ஜனாதிபதி ராம்கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அரசியல் கட்சிகள் மும்மூரமாக செயலாற்றி வருகின்றன.

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது.

குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று இரவு சென்னை வரக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பெட்டிகள் தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை நடைபெறும் இடத்திற்கு கொண்டுவரப்படும்.