shadow

இந்துமத ஆண்களுடன் மட்டும் தான் நட்பு கொள்ள வேண்டும்: இளம்பெண்களுக்கு பஜ்ரங்தள் எச்சரிக்கை

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவி தன்யா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நடந்த விசாரணையில் முஸ்லிம் மத வாலிபருடனான காதலை கை விடும்படி ஒருசில அமைப்புகள் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது

இந்த நிலையில் இந்துமதம் அல்லாத பிற ஆண்களுடன் நட்பு கொள்வதோ, காதல் கொள்வதோ கூடாது என்று பஜ்ரங்க் தள் என்ற அமைப்பு கல்லூரி மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பஜ்ரங்தள் சார்பில் விடுக்கப்பட்டு உள்ள எச்சரிக்கையில், இந்துத்துவாவை காக்க வேண்டியது பஜ்ரங்தள் அமைப்பின் கடமையாகும், இந்து அல்லாத வாலிபர்களுடன் சுற்றும் அனைவரும் கடும் இழப்பை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எச்சரிக்கை செய்தியை போலீஸ் மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொண்டு உள்ளது. மதத்தின் பெயரில் முன்னெடுக்கப்படும் இச்செயலுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்து உள்ளது. ஆனால் தங்களுடைய நடவடிக்கையை பஜ்ரங்தள் அமைப்பு நியாயப்படுத்தி உள்ளது.

Leave a Reply