சென்னை, செங்கல்பட்டு என்ன ஆச்சு? ‘பைரவா’ படக்குழு ஆச்சரியம்
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பைரவா’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது. தமிழகத்தை பொருத்தவரையில் சென்னை, செங்கல்பட்டு ஏரியா தவிர கிட்டத்தட்ட அனைத்து ஏரியாக்களின் வியாபாரம் முடிந்துவிட்டது. நேற்று கோவை ஏரியாவின் ‘பைரவா’ ரிலீஸ் உரிமையை என்.எச்.மீடியா நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் விஜய் படங்களில் அதிக வசூல் செய்யும் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வியாபாரம் மட்டும் இன்னும் முடியவில்லை. இந்த இரண்டு ஏரியாக்களின் உரிமையை பெற மிகப்பெரிய போட்டி இருப்பதால் இன்னும் இந்த வியாபாரத்தை தயாரிப்பு தரப்பு முடிக்காமல் உள்ளது. அனேகமாக அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு தொகை வியாபாரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.