‘பாகுபலி 2’ படத்தின் போர்க்காட்சி லீக். அதிர்ச்சியில் படக்குழுவினர்
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து இந்த படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் போர்க்காட்சிகள் அடங்கிய ஒருசிறிய வீடியோ க்ளிப் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் லீக் ஆகியதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மிகப்பெரிய பாதுகாப்பையும் மீறி இந்த படத்தின் க்ளிப்பிங்ஸ் லீக் ஆனது எப்படி என்று பாகுபலி 2′ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்யப்பட்டது
இந்த புகாரின்பேரில் விசாரணை செய்த சைபர் க்ரைம் போலீஸார் இந்த வீடியோவை இந்த படத்தின் வீடியோ எடிட்டர்களில் ஒருவரான கிருஷ்ணா என்பவர்தான் இணையதளத்தில் கசியவிட்டவர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதன் பின்னர் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் எடிட்டிங் செய்யும் இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.