30 நாளே ஆன பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த பெற்றோர்: அதிர்ச்சி தகவல்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வதும், உயிரோடு புதைப்பதுமான கொடூர செயல்கள் நடந்து கொண்டிருந்தன

ஆனால் தமிழக அரசின் தீவிர முயற்சியால் பெண் குழந்தைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் பெண் குழந்தை ஒன்று உயிரோடு புதைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 2ஆம் தேதி பிறந்து முப்பது நாளே ஆன குழந்தை ஒன்று இறந்து விட்டதாக உசிலம்பட்டி அருகே உள்ள புள்ளநெரி என்ற பகுதியைச் சேர்ந்த வைரமுருகன் மற்றும் சௌமியா தம்பதியினர் தங்கள் வீடு அருகே புதைத்துள்ளனர்

இது குறித்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தபோது அந்த குழந்தை தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குழந்தையை பெற்றோர்களே உயிரோடு புதைத்து தெரியவந்துள்ளதையடுத்து பெற்றோர்கள் மற்றும் குழந்தையின் தாத்தா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்

ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் உயிரோடு புதைத்ததாகமுதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply