உலகையே கலக்கிய துருக்கி சிறுவன் மரணம்: 125 ஆண்டுகள் சிறை

துருக்கி நாட்டின் கடற்கரை ஒன்றில் சிறுவன் அய்லான் குர்தி இறந்தது குறித்து 3 பேருக்கு தலா 125 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 2015ஆம் ஆண்டு சிரியாவைச் சேர்ந்த அகதிகள் பலர் பல்வேறு நாடுகளுக்கு சென்றபோது 3 வயது அய்லான் குர்தி என்ற சிறுவன் தனது பெற்றோருடன் சென்று கொண்டிருந்த படகு கடலுக்குள் மூழ்கியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் அய்லான் குர்தி உடல் துருக்கி கடற்கரையில் ஒதுங்கியது. இதுகுறித்த புகைப்படம் உலகையே உலுக்கியது.

இந்த நிலையில் அய்லான் குர்தி உள்பட அந்த படகில் அழைத்துச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. துருக்கி நீதிமன்றத்தில் நடந்து இந்த வழக்கின் விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின்படி மனிதர்களைக் கடத்திச் சென்றதாகவும், உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாகவும் கூறி மூவருக்கும் தலா 125 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்புக் கூறினார். இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply