shadow

செல்வராகவனின் இரண்டாம் பாக படங்கள் எப்போது?

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது’ நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டு, தற்போது சந்தானம் நடித்து வரும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்கலாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது ‘புதுப்பேட்டை’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களுக்கான கதையை எழுதி முடித்துவிட்டதாகவும் இந்த படங்கள் விரைவில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் செல்வராகவன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

பிரபல இயக்குனர் செல்வராகவனின் திரையுலக வாழ்க்கையில் மேற்கண்ட இரண்டு படங்களும் மிக முக்கியமானது என்பதால் நிச்சயம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இந்த படங்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply