ஆனால்….
தமிழகத்தில் கடந்த 23ஆம் தேதி முதல் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் ஆட்டோக்கள் டாக்சிகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது என்பது தெரிந்ததே
ஆட்டோ டிரைவர்கள் சானிடைசர் வைத்திருக்க வேண்டும், கைகளை அடிக்கடி கழுவவேண்டும், ஆட்டோக்களில் கிருமி நாசினி அடிக்கடி தெளிக்கவேண்டும், ஆட்டோவில் ஒரே ஒரு பயணியை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் ஆட்டோ இயங்க விதிக்கப்பட்டன
இந்த நிலையில் சென்னையில் உள்ள ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு மட்டும் ஆட்டோ மற்றும் டாக்சிகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது
நேற்று முதல் சென்னையில் விமானங்கள் இயங்க தொடங்கியுள்ளதாலும், ரயில்கள் ஓட தொடங்கியுள்ளதாலும் விமானம், மற்றும் ரயில் பயணிகளுக்காக சென்னையில் ரயில், விமான நிலையங்களுக்கு மட்டும் ஆட்டோ, டாக்சி அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.