9 வயது சிறுவனின் தலையில் மரக்க்கட்டையுடன் ஆணியடித்த கொடியவர்கள்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் ஒருவனின் தலையில் மரக்கட்டையுடன் சேர்த்து ஆணி அடித்த சம்பவம் குறித்த தகவல் சற்று முன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரோமியோ ஸ்மித் என்ற ஒன்பது வயது சிறுவனை சூழ்ந்த ஒரு கொடூர கும்பல் அந்த சிறுவனை கொடுமைப்படுத்தும் வகையில் ஒரு மரக்கட்டையை எடுத்து அவன் தலையில் வைத்து தலையுடன் மரக்கட்டையை சேர்த்து ஆணி அடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
சிறுவன் வலியால் துடித்தபடியே வீடு வந்துள்ளான். மரக்கட்டையுடன் தலையில் ஆணி அடித்ததை பார்த்த அவரது தாய் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் தாயார் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.