புஜாரா இரட்டை சதம். சாஹா சதம். வலுவான நிலையில் இந்திய அணி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
ராஞ்சியில் ந்டைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 451 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி பதிலடியாக 603 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 202 ரன்களும், சாஹா 117 ரன்களும் குவித்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. 129 ரன்கள் பின் தங்கியுள்ள ஆஸ்திரேலியாவிடம் கைவசம் எட்டு விக்கெட்டுக்கள் உள்ளது. இன்று இறுதி நாள் என்பதால் இன்னும் 8 விக்கெட்டுக்களை இந்தியா வீழ்த்தினால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.