லொள்ளுதாதா பராக் பராக் படத்திற்கு பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் ஒரு படத்தை இயக்கப்போகிறார் மன்சூர் அலிகான். இந்த படத்திற்கு அதிரடி என்று பெயர் வைத்துள்ளார். இந்த படத்திற்கு வழக்கம்போல கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம், ஹீரோ, போன்ற எல்லா வேலைகளையும் அவரேதான் செய்யப்போகிறார்.
இந்த படத்தின் பூஜை நேற்று முன் தினம் நடந்தது. இந்த பூஜையின்போது 90 செகண்டுக்களில் 50 முட்டைகளை சாப்பிட்டு சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி வயிற்றில் பாறாங்கல்லை உடைப்பது, பீர்பாட்டில்களை கையால் உடைப்பது போன்ற வித்தைகளையும் செய்து காட்டினார். தெருவில் வித்தை காட்டி பிழைக்கும் ஒருவனுக்கு காதல் ஏற்படுகிறது. அந்த காதலால் அவனது தொழிலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதைத்தான் இந்த படத்தில் விலாவாரியாக சொல்லப் போகிறாராம்.
கதாநாயகியாக ஆந்திராவை சேர்ந்த ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துகிறார். இந்த அதிரடி படம் வரும் 2014 தீபாவளிக்கு வெளியிட போவதாக மன்சூர் அலிகான் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.