234 தொகுதியிலும் இளைஞர்களுக்கு வேலை வந்துவிட்டது. அஸ்வின்
தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனும் தனது பாணியில் ஒரு பதிவை செய்துள்ளார்.
தமிழக இளைஞர்களுக்கு 234 தொகுதிகளிலும் வேலை வந்துவிட்டது என்று கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு புரட்சியை செய்தவாறு மீண்டும் ஒரு புரட்சியை இளைஞர்கள் செய்ய வேண்டும் என்பதையே அஸ்வினின் இந்த பதிவு கூறுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் அஸ்வினும் ஒரு இளைஞர் என்பதால் அவரும் 234ல் ஒருவராக வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.