shadow

பஞ்சாப் அணியின் கேப்டன் ஆனார் அஸ்வின்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சில வருடங்களாக விளையாடி வந்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை சமீபத்தில் நடந்த ஏலத்தில் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. இந்த நிலையில் தற்போது அந்த அணியின் கேப்டனாகியுள்ளார் அஸ்வின்

அஸ்வின், ஆரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், லோகேஷ் ராகுல், கருண் நாயர், மோகித் சர்மா, மனோஜ் திவாரி, யுவராஜ் சிங் ஆகிய முன்னணி வீரர்களை கொண்ட பஞ்சாப் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்பது குறித்து முடிவு செய்ய பஞ்சாப் அணியின் ஆலோசகர் குழு தீவிரமாக ஆலோசனை செய்ததில் ஆலோசனிஅ குழுவினர் உறுப்பினரான சேவாக், அஸ்வினை ஆதரித்தார். இதனையடுத்து அஸ்வின் கேப்டனாக எந்தவித எதிர்ப்பும் இன்றி தேர்வு செய்யப்பட்டார்

ங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஸ்வினை 7.6 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply