ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில் நேற்று கடைசி லீக் போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஜ்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்ததால், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 150 ரன்கள் எடுத்தது. பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கிய பாகிஸ்தான் அணி19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
48 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.