shadow

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், அடுத்தது அரசியல்தான். ஆர்யா

நடிகர் சங்கம், மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் வெற்றி பெற்றுவிட்ட நிலையில் அடுத்தது அரசியல்தான் என்ற பொருள்படும்படி ஆர்யா பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷாலின் நம்ம அணி வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறும் கூட்டம் ஒன்றை சமீபத்தில் கூட்டியது. இந்த கூட்டத்தில் பேசிய ஆர்யா, ‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. திருட்டு விசிடி தான் இங்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது. ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இந்த பிரச்னை இல்லை. அதோடு இங்கு தான் சமூக வலைத்தளங்கள், இணையதளங்களில் கூட படங்கள் வெளியாகின்றன. இதை தடுக்க இதுவரை யாரும் தைரியமாக நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் இப்போது இந்த நிலை மாறிவிட்டது. திருட்டு விசிடியை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுப்போம். தயாரிப்பாளர் சங்க தேர்தலும், ஆர்கே நகர் தேர்தலும் அருகருகே வந்ததால், இடைத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இல்லையெனில் அங்கேயும் ஒரு கூட்டணி போட்டு ஜெய்ச்சிருப்போம். மச்சான் கொஞ்சம் நேரம் இருந்தா ஆர்கே நகரில் போட்டியிலாமா என விஷாலிடம் கிண்டலாகவும் கேட்டுள்ளேன்.

விஷால் நடிக்க வந்த போது, நடிகர் சங்கத்துக்கு வருவார், அடுத்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருவார் என யாரும் யோசிக்கவில்லை. ஆனால் தற்போது அவரின் உயர்வு அனைவருக்கும் தெரியும். அமைதியாக இருந்தால் எந்த காரியமும் செய்ய முடியாது’ என்று கூறினார்.

Leave a Reply