அலங்காநல்லூரில் விரட்டியடிக்கப்பட்ட ஆர்யா. அதிர்ச்சியில் திரையுலகம்
ஜல்லிக்கட்டு என்றால் என்ன? என்று டுவிட்டரில் கிண்டல் செய்த ஆர்யா, இன்று அலங்காநல்லூர் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றபோது அங்குள்ள பொதுமக்கள் ஆர்யாவை காரில் இருந்து இறங்கவிடாமல் விரட்டி அடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்யா, சென்னைக்கு ஏமாற்றத்துடன் திரும்பினார்.
“சும்மா விளையாட்டுக்கு பேசுன பேச்சை சீரியஸ்சா எடுத்துகிட்டீங்க. நான் சந்தனத் தேவன் படத்தில் ஜல்லிக்கட்டு வீரனா நடிக்கிறேன். இந்தக்கதையை அவர் எங்கிட்ட சொல்லியே ஒரு வருஷம் ஆகிருச்சு. அப்புறம் எப்படி எனக்கு ஜல்லிக்கட்டுன்னா தெரியாம போகும்?” என்றெல்லாம் ஆர்யா விளக்கமளித்தாலும், மக்கள் நம்ப தயாரில்லை என்பதையே இந்த நிகழ்ச்சி உறுதி செய்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தனத்தேவன்’ படத்தில் ஆர்யா, ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கவுள்ளார். அனேகமாக இந்த படத்தில் ஹீரோ மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.