பிரதமர் சொன்னதை கேட்கா விட்டால் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படும்: அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை

பிரதமர் கூறியபடி ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைபிடிக்காவிட்டால் டெல்லி மக்கள் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவை பிரதமர் அறிவித்த போது எங்கு இருந்தீர்களோ, அங்கேயே இருங்கள் என்றும் இதுவே ஊரடங்கிற்கான மந்திரம் என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் இதனை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு வெற்றி பெறாது என்றும் கொரோனாவுக்கு எதிரான நாட்டின் போராட்டம் தோல்வியை தழுவும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பல்வேறு நகரங்களில் வேலை பார்த்து வரும் மக்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர் ஆனால் அவர்கள் இப்போது இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என்றும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்

ஆயிரக்கணக்கான கூட்டமாக செல்வதால் கொரோனா பாதிப்பு அதிகமாகி மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply