shadow

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள கலை , அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 2022-2023ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூலை 18ம் தேதி திங்கட் கிழமை திறக்கப்பட உள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் கல்லூரிகளில் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்