தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலும் விரைவில் தரப்படும்
இதனை அடுத்து மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான பணிகளைத் தொடங்குவார்கள் நேற்று முதல் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் அறிவித்தார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் வரும் 20ஆம் தேதி முதல் தமிழகத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் வரும் 20ஆம் தேதிமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.