shadow

ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கு என்ன சம்பந்தம்? எச்.ராஜா அதிரடி கேள்வி

complaint against H.Rajaநுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற சுவாதி கொலை முதலில் காதல் பிரச்சனையாகி, பின்னர் சமூக பிரச்சனையாக மாறி தற்போது அதில் அரசியலும் புகுந்துவிட்டது. இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசி வருவதாகவும், அவரை கைது செய்தால் இந்த கொலையில் பல உண்மைகள் வெளிவரும் என்றும் பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

சுவாதி கொலை குறித்து திருமாவளவன் கூறியதாவது :”இந்த வழக்கின் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. யாரையோ காப்பாற்றும் நோக்கில் போலீஸாரின் விசாரணை நடந்து வருகிறது. இந்தப் படுகொலைக்கு ஒரு தலைக் காதல் காரணம் அல்ல. ராம்குமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சுவாதியைக் காதலித்ததாக, எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மதம்விட்டு மதம் மாறியதால்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. போலீஸ் விசாரணையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. எனக்குக் கிடைத்த தகவல்படி, முஸ்லிம் இளைஞர் ஒருவரைக் காதலித்திருக்கிறார் சுவாதி. ரம்ஜான் மாதத்தில் நோன்பும் கடைபிடித்தார்’ என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள எச்.ராஜா, “எங்களுக்குக் கிடைத்த தகவலோ வேறு விதமாக இருக்கிறது. ஆனால், திருமாவளவன் எந்த ஆதாரமும் இல்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கொலை வழக்கின் மறைக்கப்பட்ட பல உண்மைகள் அவருக்குத் தெரிந்திருக்கின்றன. எனவே திருமாவளவனிடம் போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் அவரைக் கைது செய்ய வேண்டும்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

எச்.ராசாவுக்கு பதிலளித்துள்ள திருமாவளவன்: என்னைக் கைது செய்ய வேண்டும்’ என அவர்கள் சொல்வதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில், எந்தச் சமூகத்தையும் பழி சொல்லவில்லை. சுவாதி குடும்பத்தைக் காயப்படுத்தும்விதமாகவும் எதையும் சொல்லவில்லை. நான் சொல்வது சட்டத்திற்கு விரோதமாக இருந்தால், கைது நடவடிக்கை எடுக்கட்டும்!” என்று கூறியுள்ளார்.

Arrest me if I am saying anything illegal says Thirumavalavan

சுவாதியை அடித்தது ராம்குமார் இல்லையா? திசை திரும்புகிறது சுவாதி வழக்கு?

Leave a Reply