shadow

பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள்: மத்திய அரசுக்கு அற்புதம்மாள் கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் தண்டனை அனுபவைத்து வரும் தனது மகன் பேரறிவாளனை விடுவிக்க விருப்பம் இல்லாவிட்டால் அவரை மத்திய அரசே கருணைக் கொலை செய்து விடலாம் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கமாக தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி குறித்த தனது அதிருப்தியை நியூஸ்7 தமிழிடம் அற்புதம்மாள் வெளியிட்டார்.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளதாகக் கூறிய அற்புதம்மாள், திடீரென இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீடு எப்படி வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply