உரி தாக்குதலுக்கு பதிலடியா? முப்படை தளபதிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை
சமீபத்தில் நடந்த உரி தாக்குதல் காரணமாக இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளதோடு நாட்டின் பாதுகாப்பையும் அச்சுறுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் காரணம் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நாட்டின் முப்படைகளை சேர்ந்த தளபதிகள் மற்றும் ராணுவ உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரதமரின் அதிகாரபூரவ அரசு இல்லமான 7 லோகமான்ய திலக் சாலை வீட்டில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய ராணுவ தலைமை தளபதி தல்பிர் சிங் சுஹாக், விமானப்படை தளபதி அருப் ராஹா, கப்பற்படை துணை தளபதி சினில் லான்பா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிரடி தகவல் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.