shadow

அமெரிக்காவில் 17 ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவில் வி‌ஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதிலும் ஒரு நாளுக்கு ஒருவருக்கு மட்டுமே மரண தண்டனை என்ற நிலையில் நேற்று ஒரே நாளில் இரண்டு பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் ஒரேநாளில் இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனன நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக் ஜோன்ஸ், மார்சல் வில்லியம்ஸ் ஆகிய இருவருக்கு கடந்த 1990-ம் ஆண்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மேல் முறையீடு செய்து இருந்ததால் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.

தற்போது அவர்களின் மேல்முறையீடு மனு சுப்ரீம் கோர்ட்டினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இருவரும் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து வி‌ஷ ஊசி போட்டு கொல்லப்பட்டனர்.

ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிகழ்வு 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply