shadow

சசிகலா புஷ்பாவுடன் சமாதானமா? அதிமுக தலைமையின் அதிரடி

sasikalapushpajayaடெல்லி விமான நிலையத்தில் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக திருச்சி சிவாவை சசிகலாபுஷ்பா அடித்த விவகாரம் இன்று நாடு முழுவதிலும் உள்ள ஊடகங்களுக்கு பல நாட்கள் தீனி போடு பரபரப்பான செய்தியாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக சசிகலாபுஷ்பா, ராஜ்யசபாவில் அதிமுக தலைமை மீது கூறிய குற்றச்சாட்டால் அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு தைரியம் கொடுத்து சுப்பிரமணியன் சுவாமி என்று தெரிய வந்துள்ளதாகவும், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் நேரத்தில் அகில இந்திய அளவில் இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று அதிமுக தலைமை கருதியதாலும், சசிகலாவுடன் சமாதான பேச்சுவார்த்தை அதிமுக எம்பிக்கள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலாபுஷ்பாவும் இதற்கு ஒப்புக்கொண்டதாகவும், இன்னும் ஐந்து வருடங்கள் அதிமுக ஆட்சி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக தலைமையை பகைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்ட அவர், சமாதான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply