உயர்கல்விக்கான உதவித் தொகை பெற, விண்ணப்பங்களை நேரிடயாகவும், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2ல் 60 சதவீத மதிப்பெண் பெற்று, மருத்துவம், பொறியியல் படிப்பில் முதலாமாண்டு படிக்கும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், பாரத பிரதமரின் உயர்கல்வி உதவித் தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நவம்பர் 20க்குள் நேரிடையாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும், என்று கூறியுள்ளார். இதுதொடர்பான விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ளலாம், எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.