shadow

முதல்வர் முழுவதும் குணமாகிவிட்டார். அப்பல்லோ தலைவர் பிரதாப் சி ரெட்டி பேட்டி

jayalalithaதமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தற்போது முழுவதும் குணமாகிவிட்டதாகவும், தற்போது அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறியுள்ளார்.

இதுகுறித்து சற்று முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” முதல்வருக்கு நோய் தொற்று குணமடைந்துவிட்டது. மனதளவிலும் , உடலளவிலும் அவர் திடமாக உள்ளார். வேறு வார்டுக்கு மாற்றப்படுவது குறித்து அவரே முடிவு செய்வார். மேலும் அவர் சாதாரண உணவுகளை உட்கொண்டுவருகிறார். முதல்வர் டிஸ்சார்ஜ் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. என்று அவர் கூறினார்.

அப்பல்லோ மருத்துவ குழு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் , லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்களின் சிகிச்சையால் முதல்வர் குணம் அடைந்துவிட்டார் என்றும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply