shadow

தமிழகத்தை தொடர்ந்து ஆந்திர பீச்சிலும் போராட்டம். சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி

சங்க காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை தமிழர்கள்தான் எதற்கும் முன்னோடு என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன. அதைபோலவே சமீபத்தில் எழுச்சி அடைந்த தமிழக மாணவர்களின் போராட்டம் பலரை யோசிக்க வைத்துள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க பல ஆண்டுகளாக மத்திய அரசு மறுத்து வரும் நிலையில் தற்போது அங்கும் மாணவர்கள் புரட்சி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்துக்காக தமிழக மாணவர்களை போல நாமும் போராட வேண்டும் என ஆந்திர இளைஞர்கள் #APdemandsspecialstatus என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி மிக வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வரும் குடியரசுதினம் முதல் அதாவது நாளை முதல் விசாகப்பட்டிணம் ஆர்.கே. பீச்சில் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த அழைப்புக்கு ஆந்திர நடிகர்களான பவன்கல்யாண், நிகில், வருண் தேஜ் ஆகியோர் வெளிப்படையாகவே ஆதரவு கொடுத்துள்ளதால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply