shadow

will-anushka-do-it-for-ajith

கவுதம் மேனன் படத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. கடந்த வாரம் சென்னை ஸ்ரீசாய்பாபா கோவிலில் பூஜை முடிந்த பின்னர், இரண்டு நாட்கள் கழித்து படக்குழுவினர்களுடன் இணைந்த அஜீத், படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறார். அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் தற்போது அனுஷ்காவிடம் இருந்து ஒரு நிபந்தனை வந்துள்ளதால் கவுதம் மேனன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த படத்தில் அனுஷ்காவுக்கு பின்னணி குரல் இல்லாமல் அனுஷ்காவே குரல் கொடுக்க வேண்டும் என கவுதம் மேனன் விரும்பினார். இந்த விருப்பத்திற்கு எவ்வித மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார் அனுஷ்கா. ஆனால் பின்னணி குரல் கொடுக்க தனியாக சம்பளம் வேண்டும் என்ற நிபந்தனையையும் தெரிவித்தார். ஒரு நடிகர் நடிக்கும் படங்களுக்கு அவரே பின்னணி கொடுக்க வேண்டும். இதற்கு சேர்த்துதான் சம்பளம் பேசுவார்கள். சில நடிகர், நடிகைகளுக்கு மட்டும் அவர்களுடைய குரல் சரியாக பொருந்தவில்லை என்றால் வேறு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வைத்து பின்னணி பேசிக்கொள்வார்கள். ஆனால் நடிகை ஒருவர் தான் நடிக்கும் படத்திற்கு தானே பின்னணி பேசுவதற்கு தனியாக சம்பளம் கேட்பது இதுவரை நடைமுறையில் இல்லாதது. எனவே கவுதம் மேனன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அனுஷ்காவிற்கு பின்னணி குரல் கொடுக்க சம்பளம் கொடுத்துவிட்டால், அதையே காரணம் காட்டி அனைத்து நடிகர்களும் பின்னணி பேச என தனியாக சம்பளம் கேட்பார்கள். ஏற்கனவே அனுஷ்கா, இந்த படத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் பேசியிருக்கிறார். பின்னணிக்கு வேறு தனியாக எப்படி சம்பளம் கொடுப்பது என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் குழப்பத்தில் உள்ளனர்.

ajith-55-stills-2

ajith-55-stills-1

Leave a Reply