shadow

ரான்சம்வேர் வைரஸை அடுத்து இன்னொரு வைரஸ். அதிர்ச்சியில் டெக்னாலஜி உலகம்

ரான்சம்வேர் என்ற வைரஸ் உலகில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரையும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மேலும் ஒரு புதிய வைரஸ் தோன்றியுள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

டெக்னாலஜி உலகின் ஜாம்பவன்களாக தற்போது உருவெடுத்துள்ள ’வன்னாக்ரை’ ஹேக்கிங் குழுவினர் இ-மெயில் மூலமாக ஹேக்கிங் மால்வேரை ஒருவரது கம்ப்யூட்டருக்கு அனுப்புகின்றனர். கம்ப்யூட்டரை இயக்கும் நபர் விபரமின்றி அந்த இ-மெயிலை திறந்தால் உடனே அந்த மால்வேரானது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை ஹேக் செய்து விடுகிறது.

குறிப்பிட்ட அளவு பணம் தரும் பட்சத்தில் திருடப்பட்ட தகவல்களை திரும்ப அளிப்போம், இல்லையெனில் அந்த தகவல்களை அழித்துவிடுவோம் எனவும் அக்குழுவினர் மிரட்டல் விடுக்கின்றனர். ஒருசிலர் கேட்கும் பணத்தை வேறு வழியின்றி தந்துவிடுவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த ‘ரான்சம்வேர்’ வைரஸின் தாக்குதலுக்கு உலகமுழுவதுமுள்ள மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் தப்பவில்லை. இந்தியாவிலும் ஒருசில மாநிலங்களின் தலைமைச்செயலகம் முதல் ஏ.டி.எம் இயந்திரங்கள் வரை இந்த வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரான்சம்வேர் தாக்குதலிலிருந்தே தப்பிப்பது எப்படி என்பது குறித்து இன்னும் விழிப்புணர்வு இல்லாத நிலையில் கிட்டத்தட்ட இதே போன்ற அம்சங்களை உடைய ‘உய்விஸ்’ (UIWIX ) என்னும் மற்றொரு புதிய வைரஸ் உலகமெங்கும் உள்ள கம்ப்யூட்டர்களை தாக்கும் அபாயம் இருப்பதாக, சீனாவின் அவசர நிலை செயல்திட்ட மையம் தெரிவித்துள்ளது.

ரான்சம்வேர் போலவே இதுவும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள குறைகளை பயன்படுத்தியே கம்ப்யூட்டரில் ஊடுருவுகிறது. வைரஸால் தாக்கப்பட்ட கோப்புகளை .uiwix என்னும் ஃபார்மட் கோப்புகளாக மாற்றிவிடும். ஆனால், இதுவரை இந்த வைரசால் எந்த விதமான தாக்குதலும் கண்டறியப்படவில்லை. இருந்தபோதிலும் அவசரநிலை செயல்திட்ட மையமானது உஷார் நிலையில் உள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.

Leave a Reply