அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு எழுதாமல் பாஸ் என அறிவிக்கப்பட்டுவிட்டது

அதேபோல் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த செமஸ்டர் தேர்வுகளின் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது

அண்ணா பல்கலைக்கழகத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply