சென்னை அண்ணா சாலையில் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு
அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை மாணவ சமுதாயத்தை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. அனிதாவின் மரணத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும், தமிழகத்திற்கு நீட்-இல் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் இன்று காலை திடீரென இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூடி போராட்டம் செய்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பந்தோபஸ்து போலீசார் உடனடியாக போராட்டக்காரர்களை கைது செய்து போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர். இதனால் சில நிமிடங்கள் அண்ணா சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
//www.youtube.com/watch?v=9kOzNI7faaY
Leave a Reply
You must be logged in to post a comment.