shadow

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே
அவற்றில் ஒன்று 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் ஆந்திராவில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது

இதனை அடுத்து தமிழக அரசும் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கும் அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது