shadow

மெக்சிகோவில் பயங்கர பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

உலகம் முழுவதும் வெள்ளம், நிலச்சரிவு, பூகம்பம் என பல இடங்களில் இயற்கை அழிவுகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன்னர் மெக்சிகோவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 8.0 என்ற விதத்தில் ஏற்பட்டுள்ள இந்த பூகம்பம் காரணமாக கட்டிடங்கள், மின் விளக்கு கம்பங்கள் ஆகிய குலுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

மேலும் 8.0 என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

//www.youtube.com/watch?v=yptke3k92BE

Leave a Reply