அம்மாவுக்கு ஆலயம் கட்டிய அதிமுக தொண்டர்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலட் சுவாமிநாதன் என்பவர், ஜெயலலிதாவுக்காக ஆயலம் ஒன்றை கட்டியுள்ளார்.
ஜெயலலிதா மறைவு செய்தியை கேட்ட மறுநாளே ஆலயம் கட்டும் பணியை இவர் தொடங்கிவிட்டதாகவும் தற்போது பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும், விரைவில் கோவில் திறப்பு விழா நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி வரவுள்ள ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அவருடைய ஆளுயர சிலையை நிறுவி கோவில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலின் சுவரில் ஜெயலலிதாவின் சிறுவயது முதல் அவர் மறைவதற்கு சில காலம் முன்னர் வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வரிசையாக மாட்டி பார்வையாளர்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.