தூம் 3-யின் பிரஸ்மீட்டின் போது கத்‌ரினாவை சங்கடத்தில் ஆழ்த்தினார் அமீர் கான். என்ன சொல்வது? என்னால் பேச முடியவில்லை என்று கத்‌‌‌ரினா கதறி வாய் அடைக்கும்படி இருந்தது அந்தக் கேள்வி.

சல்மான் கானின் நண்பர் அமீர் கான். சல்மான் கான் பற்றி அமீர் கானிடம் பிரஸ்மீட்டில் கேட்கப்பட்டது. சல்மான் கானிடம் திருமணம் செய்யும்படி பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் அதை கேட்கிறதாக இல்லை. கத்‌ரினாவும், சல்மானும் நிஜ வாழ்க்கையில் ஒன்றுசேர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நான் சொன்னால் சல்மான் கேட்பதாக இல்லை. கத்‌ரினா சொன்னால் கேட்கலாம் என்றார். அத்தோடு விட்டிருக்கலாம்.

நீ கேட்டதுண்டா என்று அடுத்த கொக்கியை கத்‌ரினாவிடம் வீசினார். ஒருகாலத்தில் சல்மான் கானுடன் சுற்றியவர்தான் என்றாலும் தற்போது ரன்பீர் கபூருடன் அல்லவா பிரைவேட் பீச்சில் குளித்துக் கொண்டிருக்கிறார். “ஐ யம் ஸ்பீச்லெஸ்” என்பதோடு கத்‌ரினா கல்யாண மேட்ட‌ரிலிருந்து எஸ்கேப்.

Leave a Reply