தாய்ப்பால் கொடுத்து கொண்டே ராம்வாக் செய்த மாடல் அழகி
தாய்ப்பால் கொடுத்தபடி போஸ் கொடுத்தாலே இந்தியாவில் நீதிமன்ற படியேறும் நிலை இருக்கும் நிலையில் அமெரிக்காவில் மாடல் அழகி ஒருவர் தனது ஐந்து மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்வாக் வந்ததை பலரும் பாராட்டு வருகின்றனர்.
தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே தான் தன்னுடைய மகளுக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டே தனது பணியை செய்ததாகவும், ஆனால் இது உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாகும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் மாடல் அழகி மாரா மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
தன்னை பாராட்டிய அனைவருக்கும் நன்றி கூறிய மாரா, ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியமானது. அனைத்து தாய்மார்களும் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மாரா மார்ட்டின் தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்வாக் சென்ற வீடியோ தற்போது இணையத்தைல் வைரலாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.