விஜய்யின் மெச்சூரிட்டி பாராட்டுக்குரியது: இயக்குனர் அமீர்
தளபதி விஜய் அவர்கள் மெஜாரிட்டியாக நடந்துகொண்டதால் மிகப் பெரிய வன்முறை தடுக்கப்பட்டதாக இயக்குனர் அமீர் பாராட்டு தெரிவித்துள்ளார்
நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென பாஜகவினர் ஒருசிலர் கொடி பிடித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் அமீர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் போராட்டம் நடத்தியது கொச்சைத்தனமானது என்றும் விஜய் நினைத்திருந்தால் தனது ரசிகர்களை அந்த இடத்தில் பாதுகாப்புக்கு கொண்டு வந்து போராட்டம் செய்தவர்களை விரட்டி அடித்து இருக்கலாம் என்றும் ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் மெச்சூரிட்டியாக நடந்து கொண்டார் என்றும் அதற்காக அவருக்கு எனது பாராட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் ரஜினியை முன்னிறுத்தி பாஜக அரசியல் செய்து வரும் நிலையில் விஜய் அதற்கு எதிராக திரும்புவாரோ என்ற அச்சத்தின் காரணமாகவே அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.