இன்று மாலை 6 மணிக்குள் இந்த கடைகள் அனைத்தும் மூட வேண்டும்: முதல்வர் உத்தரவு
கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க ஏற்கனவே பல்வேறு கடைகள் மூடப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில் தமிழகம் முழுவதும் ஒரு சில டீ கடைகள் இயங்கி வந்ததாக தெரிகிறது
இந்த டீக்கடைகளில் டீ குடிக்க வருபவர்கள் டீ குடித்துவிட்டு உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் பேசி கூட்டத்தை கூட்டி வந்ததாக தெரிகிறது
இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மறு அறிவிப்பு வரும் வரை எந்த டீக்கடையும் திறக்கக்கூடாது என்றும் அவர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார். இதனால் டீக்கடைகளில் உட்கார்ந்து வீண்பேச்சு பேசுபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.