காவல்துறை உத்தரவால் பெரும் பரபரப்பு!

இன்று நடைபெற இருந்த திமுக அனைத்து கட்சி கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க ஏப்ரல் 15 அன்று அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் சூழலால் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply