shadow

பாராளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்: பிரதமர் திட்டம்

வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தலுடன் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களின் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று பிரதமர் பேசியதாக தகவல்கள் வந்துள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதை அடுத்து இந்த தொடரில் எழுப்ப வேண்டிய விஷயங்கள் குறித்து முடிவு செய்வதற்காக, பிரதமர் மோடி தலைமையில் நேற்று தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் டில்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் வரும் பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்றும் இரண்டையும் தனித் தனியாக நடத்துவதால், அதிகம் செலவு மட்டுமின்றி நேரமும் விரயமாவதாகவும், இதனால் நாட்டின் வளர்ச்சி திட்டங்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் பேசினார்.

எனவே இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க பாராளுமன்ற தேர்தலையும், அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்றும் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் மோடி பேசியுள்ளார்

Leave a Reply