shadow

‘பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை 2’ படத்தில் பிரபல இயக்குனரின் மகன்

alaigalகடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற திரைப்படம் காதலின் புதிய அத்தியாயத்தை அந்த கால இளைஞர்களிடம் தோற்றுவித்தது. வெள்ளிவிழா கண்ட இந்த படத்தில்தான் கார்த்திக் மற்றும் ராதா அறிமுகமானார்கள். மேலும் தியாகராஜ, சில்க்ஸ்மிதா நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜாவின் இசை மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது.

இந்நிலையில் இந்த படம் தற்போது இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாகவும், இந்த படத்தை பாரதிராஜா இயக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் நாயகனாக பிரபல இயக்குனர் வசந்த் மகன் நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கோலிவுட்டில் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பாரதிராஜாவு இயக்கவுள்ள புதிய படம் புத்தம் புதிய காதல் படம் என்றும் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர். மேலும் சம்ப்பத்தில் பூஜை போடப்பட்ட ‘குற்றப்பரம்பரை’ என்ற படத்தை பாரதிராஜா சில மாதங்கள் தள்ளி போட்டுள்ளதாகவும் இந்த படம் அடுத்த வருடமே தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply