shadow

அஜித் ரசிகர்கள் கடந்த 11 ஆண்டுகளாக மிரட்டி வருவதாக ஸ்டண்ட் இயக்குனர் ஜாகுவார் தங்கம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா ஒன்று எடுத்தபோது அதில் சர்ச்சைக்குரிய வகையில் அஜித் பேசினார் என்று அவரது பேச்சுக்கு ஜாக்குவார்தங்கம் கண்டனம் தெரிவித்தார்

இந்த நிலையில் கடந்த 11 ஆண்டுகளாக அவருக்கு அஜித் ரசிகர்களால் கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

இது குறித்து ஜாக்குவார்தங்கம் நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அறிவித்துள்ள நிலையில் இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது