விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் அவ்வப்போது மோதிக்கொண்டாலும், இருதரப்பு ரசிகர்களும் இணைந்து சில சமயங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுண்டு. அந்த வகையில் வரும் ஜூன் 22ஆம் தேதி 41வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் விஜய்க்கு பெருமை சேர்க்கும் விதமான அஜீத் ரசிகர்கள் அன்னதானம், ரத்ததானம், இலவச பாடபுத்தகங்கள் ஆகிய சமூக சேவைகளை செய்து அசத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் இயங்கி வரும் அஜீத்குமார் ஃபேன்ஸ் கிளம்ப் அஜீத் ரசிகர் மன்றம் சார்பாக வரும் ஜூன் 22ஆம் தேதி காலை பத்து மணிக்கு 41 அஜீத் ரசிகர் மன்றத்தினர் ரத்த தானம் செய்யவுள்ளனர். அதுமட்டுமின்றி 500 பேர்களுக்கு அன்னதானமும், 200 ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடபுத்தகங்களும் வழங்கவுள்ளனர். மேலும் அன்றைய தினம் 41 மரக்கன்றுகளையும் விஜய் ஞாபகார்த்தமாக நடவும் அஜீத் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
அஜீத் ரசிகர்களின் இந்த உன்னதமான செயலை கேள்விப்பட்டு விஜய் ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. ஆரோக்கியமான இந்த அணுகுமுறை தொடரவேண்டும் என அனைத்து தரப்பினர்களும் விரும்புவதாக கூறப்படுகிறது. [/dropcaps]
Leave a Reply
You must be logged in to post a comment.