அஜித் ரசிகர் மன்ற தலைவர் விஜய் கொலை: சரமாரிய வெட்டிய மர்ம நபர்கள்
சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் சேலம் மாநகர் மாவட்ட அஜித் ரசிகர் மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவர் நேற்றிரவு ராம்நகர் பகுதியில் இருக்கும் மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையான விஜய், மீது ஏற்கனவே வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைதான விஜய், அதன்பின்னர் ஜாமீனில் வெளிவநதுள்ளார். இந்த நிலையில் மர்ம நபர்களால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். விஜய்யை கொலை செய்தவர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்துள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை பிடிபடுவார்கள் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.